கேப்டன் இஸ் பேக்! இன்று முதல் பரப்புரை மேற்கொள்கிறார் விஜயகாந்த்

இன்றும் ,நாளையும் சென்னையில் பரப்புரை மேற்கொள்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை  தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது.அதில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேலும் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும்  வெளயிட்டது தேமுதிக.

அதிமுகவுடன் இந்த மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி வைத்துள்ள நிலையில் தேமுதிக சார்பாக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் உடல் நிலை காரணமாக  விஜயகாந்த் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் இருந்து வந்தார்.இந்நிலையில் இன்றும், நாளையும் சென்னையில் பரப்புரை மேற்கொள்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Comment