கேப்டன் தோனி சிறப்பாக விளையாட சிறிது காலம் ஆகும்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று முன்தினம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது, மேலும் அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. மேலும் தோல்வியை சரிக்கட்டும் வகையில் கடினமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவர் தோனியின் விளையாட்டை பார்த்து சிலவற்றை கூறியுள்ளார். அதில் பேசிய ஸ்டீபன் பிளமிங் கூறியதாவது, பேட்டிங்கில் தோனி இறங்கும் வரிசை குறித்து ஒவ்வொரு ஆண்டும் அனைவருக்கும் மத்தியில் கேள்வி எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் 13 வது ஓவரில் தோனி இறங்குவது மிகவும் சரியானது தான், ஏனென்றால் அந்த சூழலுக்கு ஏற்றவாறு தோனி விளையாடக் கூடியவர், மேலும் நீண்ட காலமாக விளையாடாமல் தோனி இருந்ததால் அவர் மீண்டும் சிறப்பாக விளையாட சில காலம் ஆகும். மேலும் அவர் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்க தான் செய்யும். எங்கள் அணியில் எங்களது பேட்டிங் குறித்து எந்த ஒரு கவலையும் இல்லை என்றும் கூறியுள்ளார்

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.