அவரை மாற்ற முடியாது: டி20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் பேட்டிங் குறித்து கவாஸ்கர் கருத்து..!

ஸ்ரேயஸ் ஐயர்  3-வது ஈடுபடுத்த முடியாதவர் அவர்  நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் தான் இறங்க வேண்டும் என கவாஸ்கர் கூறினார். 

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் 3-0 என்றகணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடினர்.  3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 3 முறை அரைசதம் அடித்து விராட் கோலியுடன்  சாதனையை ஸ்ரேயஸ் ஐயர் பகிர்ந்து கொண்டார் . அதுமட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட டி20  தொடர்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயர் 204 ரன் எடுத்து  முதலிடம் பிடித்துள்ளார்.

இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட  தொடரில் விராட் கோலி 199 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில்,  கோலியின் இந்த சாதனையை ஸ்ரேயஸ் ஐயர் சமன் செய்து உள்ளதால் விராட் கோலி போல பேட் செய்வதால் அவரது 3-ம்நிலை போட்டிங்கிற்கு இவர் சரியாக இனி இருப்பார் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்தது வருகின்றனர்.

இந்நிலையில்,  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஸ்ரேயஸ் ஐயர் விராட் கோலி 3-வது ஈடுபடுத்த முடியாதவர் என்றும், சூர்யகுமார் யாதவுடன், ஸ்ரேயஸ் ஐயர் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் தான் இறங்க வேண்டும் என்றும் கூறினார்.  கடந்த சமீப காலமாக விராட் கோலின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது.

author avatar
murugan