நேற்று தொடங்கிய வேட்புமனு தாக்கல்..! சனிக்கிழமையான இன்றும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், சனிக்கிழமையான இன்றும் வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது. 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று  தொடங்கியது. மேலும், சனிக்கிழமையான இன்று அரசு அலுவலகங்களுக்கு வேலை நாள் என்பதால், இன்றும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்றும் வேட்புமனுத்தாக்கல் நடைபெற உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.