#IPL2021: 5-6 ஆண்டுகளுக்கு முன் கோலியை பாத்து தோனி கூறிய அந்த வார்த்தை.. பிட்டர்சன் ஓபன் டாக்!

கோலி, தனது எனர்ஜியை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பதுதான் அடுத்த ஆண்டுகளில் நான் பார்க்க விரும்பும் ஒரு விஷயம் என்று 5-6 ஆண்டுகளுக்கு முன் தோனி கூறியதாக பிட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டனாக இருந்து வருபவர், விராட் கோலி. இவர் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அந்தவகையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பிட்டர்சன் பேசியுள்ளார்.

அப்பொழுது அவர், சில அம்சங்களின் அடிப்படையில் கோலியை எவ்வாறு மதிப்பிட்டார் என்பதை தோனி வெளிப்படுத்தியதாக கூறினார். 2016-ம் ஆண்டில் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணிக்காக பீட்டர்சன் விளையாடி வந்தார். அப்பொழுது அந்த தகவலை தோனி கூறியதாக தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “5-6 ஆண்டுகளுக்கு முன்பு நான் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது தோனி, “விராட் தனது எனர்ஜியை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பதுதான் அடுத்த ஆண்டுகளில் நான் பார்க்க விரும்பும் ஒரு விஷயம். தற்பொழுது 5-6 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் கோலி, ஒரு குழந்தையாக இருந்ததைப் போலவே இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.