வீட்டில் சும்மா இருப்பதற்கு எங்களோடு வந்து பருத்தி எடு என கண்டித்த பெற்றோர்-தற்கொலை செய்துகொண்ட மாணவன்..!

கல்லூரி தொடங்காததால் வீட்டில் சும்மா தான இருக்க, அதற்கு எங்களோடு வந்து பருத்தி எடு என்று பெற்றோர் கண்டித்ததால் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்துள்ளார் மாணவன்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் வீரையன். இவர் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர். இவரது மகன் சுரேஷ்குமார் தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் படித்து வருகிறார்.

தற்போது தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் இவர் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் இவரது பெற்றோர் பருத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.

அதனால் வீட்டில் சும்மா இருப்பதற்கு எங்களோடு பருத்தி எடுக்கலாம் என்று கண்டித்துள்ளனர். இதன் காரணத்தால் மனமுடைந்துள்ளார் சுரேஷ்குமார். மேலும், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.