இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்.! இறுதிகட்ட்ட பரப்புரையில் முக்கிய தலைவர்கள்.! குஜராத் வெற்றிவாகை யாருக்கு.?

இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்.! இறுதிகட்ட்ட பரப்புரையில் முக்கிய தலைவர்கள்.! குஜராத் வெற்றிவாகை யாருக்கு.?

குஜராத் இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. 

குஜராத் சட்டமன்ற தேர்தல் 182 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் 89 தொகுதிகளுக்கு கடந்த 1ஆம் தேதி நிறைவடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து நாளை மறுநாள் வரும் டிசம்பர் 5ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் விதிப்படி இன்று மாலையுடன் மீதம் உள்ள 93 தொகுதிகளுக்கும் பிரச்சாரம் முடிகிறது.

இந்த முறை வழக்கத்துக்கு மாறாக ஆம் ஆத்மியும் குஜராத் தேர்தல் களத்தில் தீவிரமாக இயங்கி வருவதால் பாஜக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி என மும்முனை போட்டியாக இந்த தேர்தல் உருவெடுத்துள்ளது. இறுதிக்கட்ட பிரச்சாரம் என்பதால் முக்கிய அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *