நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்றுவரை 28 நாட்கள் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 28வது நாளாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். கடந்த மார்ச் 7ம் தேதி 234 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்தபின் பரப்புரையை தொடங்கிய சீமான், அவர் போட்டியிடும் சொந்த தொகுதியான திருவொற்றியூர் தொகுதியில் இதுவரை 8 முறை பரப்புரையாற்றியுள்ளார்.
மீதமுள்ள நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சீமான், இல்லாத நாட்களில் அக்கட்சி நிர்வாகிகள் குழுக்களாக பிரிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்றுடன் நிறைவடையும் பரப்புரையையொட்டி, தேர்தலுக்கு முந்தைய கடைசி இரன்டு நாட்களாக அவரது சொந்த தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
திருவொற்றியூர் தொகுதியில் வீதி வீதியாக சென்றும், இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடியும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக இன்றைய தினம் மணலியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த தொகுதியில் ஏற்கனவே, நாம் தமிழர் கட்சி சார்பில் கொரோனா காலத்தில் செய்யப்பட்ட நலத்திட்ட பணிகள், தற்போது அதானி குழுமத்தினால் அமைக்கப்படும் துறைமுகத்தை எதிர்த்து போராடி வருவதால் சீமானுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு காணப்படுகிறது.
மக்கள் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில், தனக்கு வெற்றி நிச்சயம் என்ற நிலையில், தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். மேலும் இந்த தொகுதியில் கலை கல்லூரி, 24 மணிநேரம் இயங்கக்கூடிய அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு சாத்தான்கரை என்ற பகுதில் பொதுக்கூட்டம் நடத்தி, தேர்தல் பரப்புரையை நிறைவு செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.
Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…
School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…