கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை  நாளை விரிவாக்கம்?

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை  நாளை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக அரசியலில் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக சில எம்எல்ஏக்கள் தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள்.  இதனையடுத்து  நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எடியூரப்பாவிற்கு கிடைத்தது.பின்னர் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார் எடியூரப்பா.

ஆனால் அமைச்சரவை குறித்து மட்டும் இந்நாள் வரை அறிவிக்காமல் இருந்து வந்தார்.இந்நிலையில்  கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை  நாளை  விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 33 பேர் கொண்ட அமைச்சரவையில் முதல் கட்டமாக 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.