கடந்தாண்டு ட்ரம்பை கணித்த கரடி..இந்தாண்டு பைடன்.. கரடியின் ஜோசியம் பழிக்குமா??

கடந்தாண்டு ட்ரம்ப் தான் அதிபராக வருவார் என்று கணித்த கரடி இந்தாண்டு பைடன் தான் அதிபர் என்று கணித்துள்ளதாக சுவராஸ்ய  தகவல் வெளியாகியுள்ளது.

 அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரை எதிர்த்து ஜோ பைடன் களம் காணுகின்றனர்.இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் தேர்தல் நெருங்க உள்ளது.

தேர்தல் நெருங்க நெருங்க பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் பழுப்புக் கரடியின் கணிப்பு அனைவரின் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சைபீரிய உயிரிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்ற  புயான் என்ற பெயர் கொண்ட பழுப்புக்கரடி முன்  இரண்டு வேட்பாளர்களின் உருவம் வரைந்த தர்பூணிப்பழங்கள்  வைக்கப்பட்டது.அதில் புயான் தேர்ந்தேடுக்கும் பழத்தில் யாருடைய உருவம் வரையப்பட்டுள்ளதோ அவரே வெற்றி பெறுவார் என்று உயிரிய பூங்கா நிர்வாக அடித்து கூறுகிறது.

புயான் தன் முன் வைக்கப்பட்ட தர்பூசணிப்பழத்தில் ஜோபைடன் வரைந்த தர்பூசணிப்பழத்தை தனது வாயால் கவ்வி தேர்ந்தேடுத்து உள்ளது.இந்நிலையில் இதே புயான் தான் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ட்ரம்பை தேர்ந்தேடுத்து அது அப்படியே பலித்தது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் தான் வெற்றி என்று புயான் கரடி கணித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha