இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கம்.!

ஆந்திராவில் இன்று  முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக குறையாததால் 4 கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுப்போக்குவரத்து சேவை , அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் இதுவரை 2500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்,  1600-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்து உள்ளனர். 

இந்நிலையில், ஆந்திராவில் இன்று  முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில்லாத மண்டலங்களில் முதல் கட்டமாக 1,683 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் வருகின்ற ஆகஸ்ட் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk