பெரு நாட்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததால் 27 பேர் உயிரிழப்பு..!

பெரு நாட்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததால் 27 பேர் உயிரிழப்பு..!

பெரு நாட்டில் 250 மீ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்ததால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரு நாட்டின் சுரங்க தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தாரும் பேருந்து ஒன்றில் அயாகுசோ நகரிலிருந்து ஆரிகுப்பா நகருக்கு சென்றுள்ளனர். இது பெரு நாட்டில் தெற்கு பகுதியில் இருக்கிறது. பேருந்து பெருவியன் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது அங்கிருந்த 250 மீ ஆழப்பள்ளத்தில் திடீரென்று கவிழ்ந்து விழுந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 27 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், விபத்து நிகழ்ந்த தகவல் தெரிந்தவுடன் அவர்களை மீட்பதற்காக மீட்பு குழுவும், தீயணைப்பு வீரர்களும் விரைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பு படையினர் அருகில் இருக்கும் நாஸ்கா நகரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Join our channel google news Youtube