தொடக்க வீரர்களை ஒரே ரன்னில், ஒரே மாதிரி விக்கெட் செய்த பும்ரா..!

தொடக்க வீரர்களை ஒரே ரன்னில், ஒரே மாதிரி விக்கெட் செய்த பும்ரா..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 89 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 233 ரன்கள் எடுத்தது. களத்தில் விருத்திமான் சஹா 9 ரன், அஸ்வின் 15 ரன்களுடனும் இருந்தனர். இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய 93.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மத்தேயு வேட், ஜோ பர்ன்ஸ் இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடி வந்த மத்தேயு வேட் 15-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, ஜோ பர்ன்ஸ் 17-வது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

தொடக்க வீரர்கள் இருவரும் தலா 8 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மேலும், இவர்கள் எல்பி அவுட் ஆனார்கள். இவர்களின் விக்கெட்டை இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அவுட் செய்தார்.

author avatar
murugan
Join our channel google news Youtube