பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இதில் கடந்த முறை அருண் ஜெட்லீ பதவி வகித்த நிதியமைச்சர் பதவி ,இந்த முறை ர் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.ஜூலை 4 ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில்  டெல்லியில் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக, உட்கட்டமைப்பு துறை பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.