முறிந்த கைகள்! உடைந்த முதுகெலும்பு! ஆனால் உருகுலையாத நம்பிக்கை! இணையத்தில் வைரலாகும் முதியவரின் வீடியோ!

முறிந்த கைகள் மற்றும் உடைந்த முதுகெலும்புடன் தேநீர் கடை நடத்தும் முதியவர்.

டெல்லியில், துவாரகா செப்டர் 13 பகுதிக்கு அருகில், வயது முதிர்ந்த ஒருவர், முறிந்த கை, உடைந்த முதுகெலும்புடன், தனது மனைவியுடன் இணைந்து சிறிய டீ கடை ஒன்றினை நடத்தி வருகிறார். இதுகுறித்து, ஃபுடிவிஷால் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘குடிபோதையில் இருந்த இந்த முதியவரின் மாகாண, முதியவரை தாக்கியதில், அவரது கை முறிக்கப்பட்டுள்ளது.

கைகள் உடைந்த நிலையில், முதியவர் வீட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார். அதன் பின் அவரது மருமகன் தாக்கியதில், அவரது முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது மகள் ஒரு சிறிய தேநீர் கடை அமைப்பதற்கு உதவியதாக, அந்த பாதியில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், கடந்த மாதத்தில், வருமானத்துக்கு மிகவும் சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோவுக்கு பாலரும் ஆதாரவு தெரிவித்து வருகிற நிலையில், பிரபலங்கள் மற்றும் சில தம்பதியினர் உதவி செய்வதாக தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.