நகை கடன் தள்ளுபடி குறித்த கேள்விக்கு கல்யாணமாகி 60 நாட்களில் குழந்தை பிறந்து விடுமா? என அமைச்சர் பெரியசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மே 7-ஆம் தேதி அன்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றார். அவர் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முக்கியமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், திமுக தேர்தலின்போது நீட் தேர்வு ரத்து, நகை கடன் தள்ளுபடி, குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை மற்றும் பல அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் சேலத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் நகை கடன் தள்ளுபடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கல்யாணமாகி 60 நாட்களில் குழந்தை பிறந்து விடுமா? நகை கடன் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும். குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி விரைவில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…