சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பிரெண்டன் டெய்லர்..!

ஜிம்பாப்வே நட்சத்திர கிரிக்கெட் வீரர் பிரண்டன் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.

34 வயதான முன்னாள் கேப்டனும், பிரபல ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரருமான டெய்லர் தனது கடைசி போட்டியை அயர்லாந்துக்கு எதிராக திங்கள்கிழமை விளையாடவுள்ளார். அவர் 2004 இல் சர்வதேச அறிமுகமானார். டெய்லர் 204 ஒருநாள் போட்டிகளில் 6,677 ரன்களை எடுத்துள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் 11 சதங்கள் மற்றும் 39 அரைசதங்கள் அடித்துள்ளார். அவர் 34 டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் உட்பட 2,320 ரன்கள் எடுத்துள்ளார்.

டெய்லர் தனது பதிவில், “நான் கனத்த இதயத்துடன் அறிவிக்கிறேன், திங்கள்கிழமை (அதாவது இன்று) போட்டி நாட்டிற்கான எனது கடைசி போட்டி. எனது குறிக்கோள் எப்போதுமே அணியை நல்ல நிலையில் விட்டுவிட வேண்டும். அதைத்தான் நான் செய்தேன் என தெரிவித்தார்.

 

author avatar
murugan