அதிமுகவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்ற நிலையில்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,அந்த உத்தரவை மீறி பொதுக்குழு தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டது நீதிமன்ற அவமதிப்பு என ஓபிஎஸ் ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,தமிழ் மகன் உசேனை அவைத்தலைவராக நியமித்தது செல்லாது என அறிவிக்க கோரியும்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.ஆனால்,கடந்த ஜூன் 22 ஆம் தேதி நள்ளிரவு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருத்தும் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்த முறையீட்டில் கோரிக்கை வைக்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில்,அடுத்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தனி நீதிபதியை அணுக வேண்டும் என ஓபிஎஸ் தரப்புக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில்,ஜூலை 7 ஆம் தேதிக்கு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.இந்த வழக்கை ஒத்தி வைக்க கோரிய ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று,பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.மேலும்,நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது எனவும்,அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக வரும் 7 ஆம் தேதி ஈபிஎஸ் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Manish Sisodia: மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ்…
BJP : கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சியானது தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதள விளம்பரங்களுக்கு 3,641 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆளும் பாஜக அரசு…
Vijayakanth : விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம் ஆனால் அவர் தனக்கு உதவி செய்தார் என தினேஷ் மாஸ்டர் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் உடைய நல்ல…
ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…
Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு…
IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின்…