#Breaking: தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை.!

தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை என தகவல் 

தமிழகத்தில் நாளை வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை, நோய் தொற்று குறையாத காரணத்தால் தமிழக அரசு முடிவு என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், அனைத்து மத தலைவர்களுடன் கடந்த 3-ம் தேதி தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார். அப்போது  வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என அனைத்து மத தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர்.

வழிபாட்டு தலங்கள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து பல மாநிலங்களில் நாளை வழிபாட்டு தலங்கள் திறக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan