விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை ஒன்றரை மணிநேரமாக நிறுத்திவைப்பு.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கி சில சுற்றுகளை கடந்து நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அமைச்சர் விஜய பாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டது.
முதல் சுற்றில் வைக்கப்பட்டுள்ள 14வது மின்னணு இயந்திரத்தின் வெளியே உள்ள சீரியல் எண்ணில் தவறு இருப்பதால், அந்த இயந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ணுவதற்கு அணுமதி மறுக்கப்பட்டது. இதனால் வாக்கு எண்ணும் முகவர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், விராலிமலை தொகுதியில் ஒன்றரை மணிநேரமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மின்னணு இயந்திரத்தில் இருந்த எண்கள், முகவர்களிடம் உள்ள எண்களுடன் மாறுபட்டு இருந்ததால் வாக்கு எண்ணிக்கை மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
முதல் சுற்றில் சுமார் ஒருமணிநேரம் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது சுற்றில் ஒன்றரை மணிநேரமாக பாதிக்கப்பட்டுள்ளது. விராலிமலை தொகுதியில் இன்னும் 20க்கும் அதிகமான சுற்று வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது. இருப்பினும், தற்போதைய வாக்கு நிலவரப்படி, அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர் முன்னிலையில் உள்ளார்.
Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…
Hardik Pandya : மும்பை வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 23-ஆம் தேதி ஜெய்ப்பூர் சவாய்…
Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு. அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சர்மிளா எனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி…
Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர் உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி…
Gold Price : கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின்…
Helicopter Crash: மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.…