விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை ஒன்றரை மணிநேரமாக நிறுத்திவைப்பு.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கி சில சுற்றுகளை கடந்து நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அமைச்சர் விஜய பாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டது.
முதல் சுற்றில் வைக்கப்பட்டுள்ள 14வது மின்னணு இயந்திரத்தின் வெளியே உள்ள சீரியல் எண்ணில் தவறு இருப்பதால், அந்த இயந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ணுவதற்கு அணுமதி மறுக்கப்பட்டது. இதனால் வாக்கு எண்ணும் முகவர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், விராலிமலை தொகுதியில் ஒன்றரை மணிநேரமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மின்னணு இயந்திரத்தில் இருந்த எண்கள், முகவர்களிடம் உள்ள எண்களுடன் மாறுபட்டு இருந்ததால் வாக்கு எண்ணிக்கை மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
முதல் சுற்றில் சுமார் ஒருமணிநேரம் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது சுற்றில் ஒன்றரை மணிநேரமாக பாதிக்கப்பட்டுள்ளது. விராலிமலை தொகுதியில் இன்னும் 20க்கும் அதிகமான சுற்று வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது. இருப்பினும், தற்போதைய வாக்கு நிலவரப்படி, அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர் முன்னிலையில் உள்ளார்.
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…