#Breaking : தடையை மீறி வேல் யாத்திரை! தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கைது!

#Breaking : தடையை மீறி வேல் யாத்திரை! தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கைது!

தடையை மீறி வேல் யாத்திரையை நடத்திய எல்.முருகன் மற்றும் நிர்வாகிகளை கைது செய்த போலீசார். 

திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை, நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை, பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற இருந்த நிலையில், தமிழக அரசு நேற்று இந்த யாத்திரையை நடத்த அனுமதி மறுத்தது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கியமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று காலை தடையை மீறி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், கையில் வேலுடன் திருத்தணி நோக்கி புறப்பட்டார். இவர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து, திருத்தணியில் தடையை மீறி தொடங்கப்பட்ட வேல் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில், இந்த யாத்திரையை தொடங்கிய தமிழக பாஜக தலைவர், எல்.முருகன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்து, பேருந்தில் அழைத்து சென்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube