#BREAKING : தடுப்பூசி போதுமானதாக இல்லை…! பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிற்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தை பொறுத்தவரையில் மாநிலம் முழுவதும் தேவையான தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.

தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்க வேண்டும் என்றும், மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசிகள் கிடைத்திட வலியுறுத்தியும், ஒருகோடி தடுப்பூசியை சிறப்பு ஒதுக்கீடாக வழங்குமாறும் அந்த கடிதத்தில் கோரியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.