#Breaking : நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து ஒப்புதல்…!

நீரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்து 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 14,000 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல்  இங்கிலாந்திற்கு தப்பிச் சென்றுள்ளார். இதுதொடர்பாக சிபிஐயும், அமலாக்கத் துறையும்,  தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே இவர் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற நிலையில், மேற்கிந்திய தீவு நாடு ஒன்றில் அவர் தஞ்சம் புகுந்துள்ளார். பின் இந்திய அரசு நெருக்கடியைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறி மீண்டும் இங்கிலாந்துக்கு வந்துள்ளா. தலைநகர் லண்டனில் மறைவாக இருந்த நீரவ் மோடியை, கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்தனர்.

அதன் பின் அவரை மீண்டும் இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளில் அமலாக்கத் துறையும் சிபிஐயும் ஈடுபட்டது. இதற்காக அங்குள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன்படி இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் நிறைவடைந்தன.

பின் பிப்ரவரி 25-ஆம் தேதி இந்த வழக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பின் படி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதில் அவர் குற்றவாளியாகவும் நிரூபிக்க போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், மேலும் அவர் மீது சிபிஐ அமலாக்கத் துறையும் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும்,  இதனையடுத்து இந்திய நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகி பதில் அளிக்கவேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து, வைர வியாபாரி நீரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலை, இங்கிலாந்து உள்துறை அமைச்சர் வழங்கியுள்ளதாக சிபிஐ தகவல் அளித்துள்ளது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஐபிஎல் 2024 : மீண்டும் இணைந்த அஸ்வின் – பட்லர் ! டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு !

ஐபிஎல் 2024 :  ஐபிஎல் தொடர் இன்றைய போட்டியில் தற்போது கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின்-17 வது சீசனில்…

2 hours ago

6000mAh பேட்டரி…அசத்தல் அம்சங்களுடன் இறங்கிய ‘மோட்டோ ஜி 64 5 ஜி’…விற்பனை எகிற போகுது!

Moto G64 5G : அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ ஜி 64 5ஜி  (Moto G64 5G) போன் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகி உள்ளது விற்பனைக்கு…

2 hours ago

ஷங்கர் மகள் திருமணம்…விஜய் இல்லாமல் தனியாக வந்த மனைவி சங்கீதா!

Vijay Wife: இயக்குனர் ஷங்கர் மகளின் திருமணம் விழாவில் விஜய் இன்றி தனியாக கலந்துகொண்ட சங்கீதா விஜய்யின் புகைப்படம் வைரல். பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள்…

2 hours ago

ஐபிஎல் போட்டியில் டாஸ் ஃபிக்சிங்? சர்ச்சையை கிளப்பிய டு பிளெசிஸ் வீடியோ !

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் டாஸ்ஸின் போது டுபிளெசிஸ் செய்த சில சைகையின் வீடியோ ஒன்று கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும்…

3 hours ago

மீண்டும் வாக்குச்சீட்டு நடைமுறை என்பது சாத்தியமற்றது… உச்சநீதிமன்றம்!

Supreme court: மீண்டும் வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்…

3 hours ago

ஒன் மேன் ஷோ! வசூலில் அதிரடி கிளப்பும் ஆவேசம்!

Aavesham : பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படம் உலகம் முழுவதும் 50 கோடி வசூலை கடந்துள்ளது. மலையாள சினிமாவில் இருந்து சமீப காலமாக வெளியான…

3 hours ago