#Breaking : இந்த தேர்தல் ஆளும் கட்சிக்கு எதிர்ப்பாக பார்க்கிறேன்…! – மு.க.ஸ்டாலின்

இந்த தேர்தல் ஆளும்கட்சிக்கு எதிர்ப்பாக இருப்பதை பார்க்கிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதி ஆகியோர் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில், மக்களோடு மக்களாய் வரிசையில் காத்திருந்து, வாக்குகளை பதிவு செய்தனர்.

வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, மு.க.ஸ்டாலின், குடும்பத்துடன் வந்து எங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளோம். தமிழகம் முழுவதும் மக்கள் அமைதியாக வாக்களித்து வருகின்றனர். இதனுடைய முடிவு சிறப்பாக இருக்கும். இந்த தேர்தல் ஆளும்கட்சிக்கு எதிர்ப்பாக இருப்பதை பார்க்கிறேன். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்தி என்றும் சொல்ல முடியாது, அதிருப்தி என்றும் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

 மேலும், தோல்வி பயத்தால் தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சி வலியுறுத்தியது. ஆனால் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.