#BREAKING: திருவள்ளூர் மாணவி தற்கொலை – காவல் அதிகாரிகள் விசாரணை!

#BREAKING: திருவள்ளூர் மாணவி தற்கொலை – காவல் அதிகாரிகள் விசாரணை!

திருவள்ளூர் அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட தனியார் பள்ளியில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள், காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  பள்ளிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.  இந்த நிலையில், திருவள்ளூர் அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட தனியார் பள்ளியில் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் டிஐஜி சத்யப்ரியா, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி கல்யாண் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமாரும் மாணவி தற்கொலை செய்த தனியார் பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *