மதுரையில் பூட்டை உடைத்து 500 சவரன் நகை, ரூ. 8லட்சம் திருட்டு…!!

மதுரையில் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 500 சவரன் நகையை திருடிச் சென்று இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் தங்கவேலு வீட்டை பூட்டிவிட்டு நடை பயிற்சிக்காக சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 500 சவரன் நகை, 8 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இந்தநிலையில் வீடு திரும்பியதும் நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த தங்கவேலு, உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment