#BREAKING : ஜூலை முதல் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு – அமைச்சர் செங்கோட்டையன்

#BREAKING : ஜூலை முதல் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு – அமைச்சர் செங்கோட்டையன்

Default Image

ஜூலை மாதம் முதல் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.இதனால் தேர்வு தாள்களை திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவுபெற்றுள்ளது.எனவே தேர்வு முடிவுகள் எப்போது என்று கேள்வி அதிகம் எழுந்து வந்தது.

இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜூலை மாதம் முதல் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் எனக்கூறினார்.மேலும் கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதமாகி உள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  

Join our channel google news Youtube