#BREAKING: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் மாற்றம்!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக ஜெயந்தியை நியமனம் செய்து அரசாணை வெளியீடு.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக ஜெயந்தி IFS-ஐ நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக இருந்த உதயன் IFS, வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனராக தீபக் பில்கி IFS-ஐ நியமனம் செய்து வனத்துறை செயலர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment