#BREAKING: ஆடிட்டர் குருமூர்த்திக்கு தமிழக அரசு நோட்டீஸ்.!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு மீது ஆடிட்டர் குருமூர்த்திக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

பிப்ரவரி 16-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆடிட்டர் குருமூர்த்திக்கு தமிழக அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி குறித்த விண்ணப்பத்தின் விசாணைக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நீதிபதிகள் பற்றிய குருமூர்த்தி பேச்சு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் துரைசாமி விண்ணப்பித்திருந்தார். துக்ளக் ஆண்டுவிழாவில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது அரசு தரப்பில் நோன்டஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்