#Breaking : நிறைவடைந்தது தமிழக சட்டமன்ற தேர்தல்…!

தமிழாக்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 

தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது, 12  நேரத்திற்கு பின்  நிறைவடைந்துள்ளது. பெரும்பாலான வாக்குச்சாவடியில், பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இந்த தேர்தலானது சிறுசிறு மோதல்களுக்கு மத்தியில், பெரிய அளவிலான கலவரங்கள் ஏற்படாமல், தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நேரம் முடிந்தாலும், வாக்குச்சாவடியில் வந்து காத்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.