#BREAKING: மீண்டும் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி..!

கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர் மற்றும்  பைசல் பேரத் ஆகியோர் மீது தீவிரவாத நிதி திரட்டல், சட்டவிரோத தடுப்பு செயல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஸை விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, நேற்று மேலும் மூன்று நாட்கள் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிலையில்,  ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனுதாக்கல் செய்தார்.  கேரள பொருளாதார குற்றவியல் நீதிமன்றம்  இந்த ஜாமீன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ,  நீதிபதிகள்  என்.ஐ.ஏ முன்வைத்த ஆதாரங்களை கருத்தில் கொண்டு ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதுவரை 3- முறை ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை என்ஐஏ சிறப்பு நீதிமன்றமும் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரூ.100 கோடி  மேல் மதிப்புள்ள தங்கத்தை  கடத்தியதாக கூறப்படுகிறது. இதனால், இந்த வழக்கில் முழுமையான விசாரணை தேவை என்று கூறி, ஜாமீன் மனுவை என்ஐஏ கடுமையாக எதிர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

murugan

Recent Posts

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

1 hour ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

2 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

3 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

3 hours ago

ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…

4 hours ago

6,244 பணியிடங்கள்… ஜூன் 9இல் குரூப் 4 தேர்வு.! TNPSCயின் முக்கிய தேர்வு தேதிகள் இதோ….

TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…

4 hours ago