#BREAKING: அரசு நிலத்தில் சிலைகள் அமைக்கக்கூடாது – உயர்நீதிமன்றம்

எதிர்காலத்தில் அனுமதியின்றி சிலைகள் அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.

அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. தலைவர்கள் மரியாதைக்கு உரியவர்கள், அவர்களை அவமரியாதை செய்யவில்லை. எதிர்காலத்தில் அனுமதியின்றி சிலைகள் அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அணையிட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பான உத்தரவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும் கேள்வி எழுப்பி, தமிழக அரசு, தலைமை செயலாளர் 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்