BREAKING: ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் உயிரிழப்பு.!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளை அதிகமாக பாதித்துள்ளது. இதனால் ஈரான் , இத்தாலி , ஸ்பெயின் போன்ற நாடுகளில்  பாதிக்கப்பட்டவர்கள் , இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது.

ஸ்பெயினில் கொரோனாவால் 73,235 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 5,982 ஆக உள்ளது.இந்நிலையில் ஸ்பெயினில் இளவரசி மரியா தெரசா கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

இளவரசி மரியா தெரசாவிற்கு வயது 86 இவர் கடந்த 26-ம் தேதி  இறந்தார் என்று அவரது சகோதரர் இளவரசர் சிக்ஸ்டோ என்ரிக் டி போர்பன் பேஸ்புக்கில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் இறந்தவர்களின் எண்ணிக்கை சீனாவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan