#BREAKING: செம்பரப்பக்கம், புழல் ஏரிகள் 1 மணிக்கு திறப்பு.!

திருவள்ளூர் செம்பரப்பக்கம், புழல் ஏரிகளில் இருந்து மதியம் 1 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் முதற்கட்டமாக 500 கனஅடி உபரி நீர் இன்று பிற்பகல் 1 மணிக்கு வெளியேற்றப்பட உள்ளது. மேலும், உபரிநீர் திறப்பின் காரணமாக கரையோர மக்களுக்கு ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, நாரவாரிக்குப்பம், வடகரை, புழல், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்