#BREAKING: சசிகலா வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யகோரிய ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு. 

சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு வேறொரு நாளில் ஒத்திவைக்கப்பட்டது. சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திடீரென விடுமுறையில் சென்றதால் வேறு ஒருநாளில் தீர்ப்பு வழங்கபடுகிறது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மனுக்கள் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் சசிகலா விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி விடுமுறை என்பதால் தீர்ப்புக்கான தேதியை பின்னர் அறிவிக்கிறது சென்னை உரிமையியல் நீதிமன்றம். அதிமுக பொதுச்செயலாளர் பதவிலியிருந்து தன்னை நீக்கிய பொது குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சசிகலா வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்