#BREAKING : நடிகர் விமல் அளித்த புகாரின் பேரில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது…!

நடிகர் விமல் அளித்த பணமோசடி புகாரின் பேரில், தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது. 

நடிகர் விமல், சிங்காரவேலன் என்ற தயாரிப்பாளர் தன் பெயர் மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி A3V என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி மோசடி செய்துள்ளதாகவும், மன்னர் வகையறா படத்திற்காக பணத்தை கடனாகப் பெற்று, படத்தை விற்பனை செய்து வரும் பணத்தையும் முறையாக கணக்கு காட்டாமல் சிங்காரவேலன் மற்றும் அவரது நண்பர்கள் மோசடி செய்ததாக போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், தயாரிப்பாளர் சிங்காரவேலனை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே ஒரு  சிங்காரவேலன் நீதிமன்ற உத்தரவை பின்பற்றுறாததாலும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சிணாகரவேலன் நண்பர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.