#BREAKING : பிரதமர் நரேந்திர மோடி வரும் 16-ம் தேதி முதல்வர்களுடன் ஆலோசனை…!

இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் வரும் 16-ம் தேதி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா மாநில முதல்வர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி, கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசிக்கவுள்ளார். இன்று தமிழக முதல்வர் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் நேரடியாக தமிழகத்தின் தடுப்பூசி தேவை குறித்து வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.