#BREAKING: தமிழக காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு!

குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த 17 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் அறிவிப்பு. 

நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி தமிழக காவல் அதிகாரி ஏடிஜிபி வெங்கட்ராமன், சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சிவனருளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தையொட்டி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் 939 காவல்துறையினருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் குடியரசு தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான சிறப்பு பதக்கம் 88 பேருக்கு வழங்கப்பட உள்ளது. சிறந்த சேவைக்கான காவல்துறை பதக்கம் தமிழகத்தை சேர்ந்த 17 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், ஐஜி பிரதீப் குமார் மற்றும் ஏஐஜி சரவணன் உள்ளிட்டோருக்கு பதக்கங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்