#Breaking:மீண்டும் காங்.தலைவர் சோனியாவை சந்தித்த பிரசாந்த் கிஷோர்;இதுதான் காரணமா?..!

#Breaking:மீண்டும் காங்.தலைவர் சோனியாவை சந்தித்த பிரசாந்த் கிஷோர்;இதுதான் காரணமா?..!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன்,தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோர் 3-வது முறையாக தற்போது மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றார்.வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வழி வகுக்கும் முறைகள் தொடர்பாக இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருபதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே,நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது  என்பது தொடர்பாக சோனியா காந்தியிடம் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி பிரசாந்த் கிஷோர் விளக்கிய நிலையில்,நேற்றும் சந்திப்பு நிகழந்துள்ளது.இந்த நிலையில்,தற்போது மீண்டும் சோனியா காந்தி அவர்களை சந்தித்து பிரசாந்த் ஆலோசனை நடத்தி வருகின்றார்.

இதனிடையே,பிரசாந்த் கிஷோர் வெறும் தேர்தல் ஆலோசகராக மட்டும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதன்காரணமாகவே, தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழ்வதாக கூறப்படுகின்றது.

Join our channel google news Youtube