#Breaking:பாக்.பிரதமருக்கு எதிரான வாக்கெடுப்பு அடுத்த வாரத்துக்கு தள்ளி வைப்பு?!

பாக்.பிரதமர் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் யாரும் வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றம் வரவில்லை என தகவல்.

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இன்று வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில்,இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் யாரும் வாக்கெடுப்புக்கு நாடாளுமன்றம் வரவில்லை என்றும்,இதனால்,வாக்கெடுப்பு அடுத்த வாரத்துக்கு தள்ளி போகலாம் என்றும் பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சர் க்பவத் சவுத்ரி தகவல் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,நாடாளுமன்றத்திற்கு வந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.