#BREAKING: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரி மனு!

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனு மீது தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனு மீது செப்டம்பர் 22-ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லுபுத்தூர் உளப்பட 9 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் செல்ல அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அணிவகுப்பை ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என மனுதாரர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அவர்களது உடை அணிந்து, ஊர்வலம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment