இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,58,089 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 385 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,73,80,253 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,209 ஆக உயர்வு.
- கடந்த 24 மணி நேரத்தில் 2,58,089 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 13,000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,73,80,253 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 385 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,86,451 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 1,51,740 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,52,37,461 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 16,56,341 ஆக அதிகரித்துள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 1,57,20,41,825 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 39,46,348 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் பாதிப்பு:
- நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை 7,743 ஆக இருந்த நிலையில்,தற்போது 8,209 ஆக உயர்ந்துள்ளது.
- அதிகபட்சமாக,மகாராஷ்டிராவில் 1,738 பேருக்கும்,மேற்கு வங்கத்தில் 1,672 பேருக்கும்,ராஜஸ்தானில் 1,276 பேருக்கும்,கேரளாவில் 536 பேருக்கும்,தமிழகத்தில் 241 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
- ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து இதுவரை 3,109 பேர் குணமடைந்துள்ளனர்.