#BREAKING: விதிகளை மக்கள் பின்பற்றவில்லை – மோடி கவலை.!

கொரோனா  முன்னெச்சரிக்கைக்கான விதிமுறைகள் மக்கள் தீவிரமாக பின்பற்றவில்லை பிரதமர் மோடி கூறியுள்ளார். கூட்டம் சேர வேண்டாம்  ,வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்பன உள்ளிட்ட விதி முறைகளை தீவிரமாக பின்பற்ற கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் அரசு கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றி உங்களையும் ,குடும்பத்தினரையும் பாதுகாத்து கொள்ளுங்கள் என மோடி கூறியுள்ளார்.விதிமுறைகளை மக்கள் உரிய பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதி செய்யவேண்டும் என மோடி கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டின் வாசலில் நின்று கைதட்ட வேண்டும் என மோடி கூறியிருந்தார்.ஆனால் மும்பை ,டெல்லி போன்ற பல இடங்களில் பொதுமக்கள் தெருவில் வந்து கூட்டமாக கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan