பள்ளி,கல்லூரிகள் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,குறிப்பாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைள மற்றும் பள்ளி,கல்லூரிகள் திறப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.தலைமைச்செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,சுகாதாரத்துறை அதிகாரிகள்,மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும்,கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கொரோனாபரவாமல் தடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.