#BREAKING: மாணவி தற்கொலையில் மதப்பரப்புரை புகார் இல்லை – பள்ளிக்கல்வித்துறை

மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மத தொடர்பான பரப்புரை எதுவும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.

அரியலூா் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சோ்ந்த 17 வயது மாணவி, இவா் தஞ்சாவூா் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். விடுதியில் தங்கியிருந்த படித்து வந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். பள்ளி மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழக முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மதம் மாற  சொல்லி வற்புறுத்தியதால், அவா் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனு அளிக்கப்பட்டது. ஒருபுறம் தமிழக பாஜக தரப்பில் இருந்து பேசும்போது, மதமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில், தஞ்சை பள்ளி மாணவி தற்கொலையில் மதப்பரப்புரை புகார் எதுவும் இல்லை என பள்ளி மற்றும் பிற மாணவர்களிடம் விசாரணை நடத்திய பின்பு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்த தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளார். முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் உள்பட 16 பேர் பள்ளியில் நேரடியாக பார்வையிட்டனர்.

அந்த அறிக்கையில், அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மத தொடர்பான பரப்புரை எதுவும் இல்லை. பள்ளியில் பயின்ற மாணவர்களிடம் இருந்து மதம் சார்பாக புகார்கள் இதுவரை பெறப்படவில்லை. முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு மதம் சார்பான புகார்கள் எதுவும் பெறப்படவில்லை. தொடர் விடுமுறைகளின் போது மற்ற மாணவிகள் சொந்த ஊருக்கு செல்லும்போதும், சம்மந்தப்பட்ட மாணவி விடுதியிலேயே இருப்பார் என்றும் கூறியுள்ளனர்.

மதரீதியான பிரச்சாரங்கள் தலைமை ஆசிரியர்களாலோ, மற்ற ஆசிரியர்களாலோ செய்யப்படவில்லை. குறிப்பிட்ட பள்ளியில் கிறிஸ்துவ மாணவர்களை விட இந்து மாணவர்களே அதிகளவில் கல்வி பயில்கின்றன. பள்ளியில் பயிலும் மாணவர்களில் இந்துக்கள் 5,200, கிறிஸ்துவர்கள் 2,290, இஸ்லாமியர்கள் 179 பேர் பயின்று வருகின்றனர்.

தொடர் விடுமுறையின்போது சம்மந்தப்பட்ட மாணவி கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் தங்கியிருந்துள்ளார். பள்ளி சேர்க்கை பதிவேட்டு, சேர்க்கை விண்ணப்பம், 7-ஆம் வகுப்பு மாற்றுச்சான்றிதழில் பெற்றோர் கையொப்பத்தில் சரண்யா என உள்ளது. ஜனவரி 10-ஆம் தேதி உடல்நலக்குறைவால், பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவி சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.  எனவே பள்ளி மாணவர்களிடம் மதரீதியான பரப்புரைகளில் தலைமை ஆசிரியரோ, பிற ஆசிரியர்களோ ஈடுபடவில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

சம்பளமே வேண்டாம்! விஜய்க்காக விஜயகாந்த் செய்த உதவி?

Vijayakanth : விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்  நஷ்டத்தால் மூழ்கிய போது அவருக்கும், விஜய்க்கும்  விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் பல தயாரிப்பாளர்களுக்கு, பல இயக்குனர்களுக்கு…

17 mins ago

உண்மையை சொன்னேன்… பயத்தில் மூழ்கிய I.N.D.I.A கூட்டணி.! – பிரதமர் மோடி.

PM Modi : உண்மையை சொன்னதால், I.N.D.I.A கூட்டணி பயத்தில் மூழ்கியுள்ளது என பிரதமர் மோடி ராஜஸ்தான் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25…

37 mins ago

செல்வராகவன் கெட்டவார்த்தை போட்டு திட்டி விரட்டிட்டாரு! பாவா லட்சுமணன் வேதனை!

Selvaraghavan : செல்வராகவன் தன்னை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக பாவா லட்சுமணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கோபமாக நடந்து கொள்வார் என…

1 hour ago

மக்களே கவனம்!! தமிழகத்தில் வெப்ப அலை வீசும்…மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Weather Update: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரித்து காணப்படும். தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம்…

1 hour ago

320-ஐ எட்டியது சர்க்கரை அளவு…சிறையில் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி.!

Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…

2 hours ago

வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடனும்! தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா பேச்சு!

Hardik Pandya : மும்பை வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 23-ஆம் தேதி ஜெய்ப்பூர் சவாய்…

2 hours ago