தமது திருமண செய்தியை தாமே பிரேகிங் நியூஸாக அறிவித்த நிருபர் !

தமது திருமணம் குறித்த செய்தியை தாமே பிரேகிங் நியூஸாக அறிவித்த வீடியோ காட்சிகள்   சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவுகிறது. சிட்டி 41 என்ற  பாகிஸ்தான் செய்தித்தொலைக்காட்சியில்  பணிபுரியும் நிருபர் ஒருவர், மணக் கோலத்திலேயே தமது திருமணத்தை பிரேகிங் செய்தியாக நேரலையில் வெளியிட்டார்.

திருமணம் குறித்த விவரங்களையும் பிரேகிங் செய்தியிலேயே கையில் மைக் பிடித்தபடி தெரிவித்த நிருபர், தமது தாய், தந்தை, மாமனார், மாமியார், மனைவி ஆகியோரையும் பேட்டி கண்டார். மூன்று முதல் 4 ஆண்டுகளுக்குப் பின் தம் காதலை ஏற்றுக் கொண்டதாகவும் அவர் அதில் குறிப்பிட்டு வாழ்வின் முக்கியத் தருணத்தை நேயர்களுக்கு பகிர்ந்ததை மகிழ்ச்சி எனவும் மணக்கோலத்தில் மைக் பிடித்த அந்த நிருபர் தெரிவித்தார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment