BREAKING NEWS:பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்ததாக ராகுல் காந்தி கூறுவது நகைப்பிற்குரியது!மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் ,நாடாளுமன்றத்தை ஜனநாயாக கேலிக்கூத்தாக்கியது காங்கிரஸ் கட்சி. பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்ததாக ராகுல் காந்தி கூறுவது நகைப்பிற்குரியது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி கூறியது:

தேசிய கீதத்துக்கு பாஜக மரியாதை அளிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பாஜகவினர் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

பாஜக எம்எல்ஏக்களும், சபாநாயகரும் தேசிய கீதம் முடிவதற்கு முன்பாகவே எழுந்து சென்றுவிட்டனர்.பாஜகவின் ஜனநாயகம் இதுதானா?  உச்சநீதிமன்றம், மக்கள் ஆகியவற்றை விட பெரிய அதிகாரம் பிரதமருக்கு கிடையாது என்றும் காங். தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.மக்களின் தீர்ப்பை எந்த மாநிலத்திலும் பாஜக மதிப்பதில்லை.

எம்எல்ஏக்களை மோடி பேரம் பேச முயன்றது சட்டப்பேரவையில் வெளிப்படையாக தெரிந்துவிட்டது. அதனால், நாட்டில் ஊழலை ஒழிக்க போராடுவதாக மோடி கூறுவதெல்லாம் அப்பட்டமான பொய், அவரே ஒரு ஊழல்வாதி என்று காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment