BREAKING NEWS:தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு கேவியட் மனு!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு கேவியட் மனு:

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்:

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதற்கு எதிராக ஆலை நிர்வாகம் மனுதாக்கல் செய்தால் தமிழக அரசின் வாதங்களை கேட்டபின் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்யும் என தகவல் வெளியானதால் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த மே 28 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்தது:

பசுமைத் தீர்ப்பாயம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றவில்லை.மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் தண்ணீர் விநியோகமும் நிறுத்தம்.-ல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டார் .இந்த உத்தரவை எதிர்த்து, செய்த மேல்முறையீட்டில் அன்று ஆலையை இயக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. ல் ஆலையை இயக்குவதற்கான இசைவாணையை வழங்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்தது. அன்று முதல் ஆலைக்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

எனவே தூத்துக்குடி மாவட்ட மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

இதன் பின்னர் தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்.ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர் .ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான, தமிழக அரசின் அரசாணை, ஆலையின் நுழைவு வாயிலில் உள்ள கதவில் ஒட்டப்பட்டது.

இதேபோல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தரப்பட்ட நிலத்தை ரத்து செய்தது தமிழக அரசு. ஸ்டெர்லைட்டின் 2வது யூனிட்டுக்காக சிப்காட் ஒதுக்கிய நிலம் ரத்து செய்யப்பட்டது.பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக நிலம் ஒதுக்கீடு ரத்து என்று சிப்காட் நிர்வாகம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment