#BREAKING: புதிய சாதனை..இந்தியாவில் இன்று ஒரே நாளில் 2 கோடியை தாண்டிய கொரோனா தடுப்பூசி!

#BREAKING: புதிய சாதனை..இந்தியாவில் இன்று ஒரே நாளில் 2 கோடியை தாண்டிய கொரோனா தடுப்பூசி!

இந்தியாவில் இன்று மட்டும் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 2 கோடிக்கு பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் நாடு தழுவிய அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது இதுவே அதிகபட்சம் என்பதாகும். இன்று பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், இன்று இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது. ஒரே நாளில் அதிக தடுப்பூசி சாதனை இந்தியாவுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு என்று மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி ஒரு கோடியே 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியது தான் இதுவரை அதிகபட்சமாக இருந்த நிலையில், இன்று 2 கோடி பேருக்கு செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.

நாட்டில் இதுவரை மொத்தம் 77 கோடிக்கு அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்பது இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube